search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்"

    மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MinisterMRVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈசநத்தம் பகுதியில் வேளாண்மைத்துறையின் சார்பில் அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்பிழியும் எந்திர மையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்திரனராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, எண்ணெய்பிழியும் எந்திர மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

    வேளாண்மைத்துறையின் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலம் ரூ.3.91 லட்சம் வழங்கப்பட்டு அதனோடு அரசு மானியமாக ரூ.10 லட்சம் பெறப்பட்டு மொத்தம் ரூ.13 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் இந்த மையம் அமைக்கப் பட்டுள்ளது.


    இதில் எண்ணெய் பிழியும் எந்திரம், எண்ணெய் வடிகட்டும் எந்திரம் மற்றும் எண்ணெய் நிரப்பும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. சுத்தமான, சுகாதாரமான முறையில் இங்கு கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய் பிழிந்து தரப்பட உள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் இந்த மையத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கரூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கானகத்துக்குள் கரூர் என்ற அடிப்படையில் அதிக அளவில் ஆலம், அரசு, பனை மற்றும் நாட்டு மரங்களை நடவு செய்ய இந்தத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் பொதுமக்களும் அதிக அளவில் மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, வேளாண்மை பொறியியல்துறை செயல்பொறியாளர் ராஜ்குமார், உதவி இயக்குனர் கந்தசாமி அரவக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர் குழு தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் காளியப்பன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterMRVijayabaskar
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MRVijayabhaskar #Diwali #SpecialBus
    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். 

    சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.



    தென் மாவட்டஙகளுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். 

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

    தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். #MRVijayabhaskar #Diwali #SpecialBus
    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரூர் மாவட்டத்தில் 155 ஏக்கர் நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #cauveryriver
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டத்தில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரூர் மாவட்டத்தில் 90 குடியிருப்பு பகுதிகளிலும் 155 ஏக்கர் விளை நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.  

    அமராவதி ,பவானி, நொய்யல் போன்ற ஆறுகளில் இருந்து காவிரியில் கலந்து வரும் நீரின் அளவானது சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் 90 குடும்பத்தை சேர்ந்த 275 பேர் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பெட்ஷீட், பாய் ,உணவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை ,காவல்துறை ஆகிய 3 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு செய்த பிறகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministermrvijayabaskar #cauveryriver
    நீலகிரி சாலை விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். #NilgiriBusAccident #MRVijayaBaskar
    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மந்தாடா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டது. சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது. 

    இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். அதில் சிலர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    விபத்தில் லேசான காயம் அடைந்த 3 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், படுகாயம் அடைந்த 5 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், தண்டு வடம் பாதித்த பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினர். மொத்தம் 9 பேருக்கு ரூ.15.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். தமிழகத்தில் தற்போது விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன என தெரிவித்தார். #NilgiriBusAccident #MRVijayaBaskar
    ×